Tuesday, 2 July 2013

யாருக்கு இழப்பு?



பள்ளிக்கூட பாடம்
பகுத்தறிவைத் தரவில்லை.

ஒப்பிக்கும் திறனை
உயர்ந்திட வைத்தது.
அன்னையும் பிதாவும்
அனுதினம் படிக்க வைத்து
மெமரியை
மேம்படச் செய்தனர்.

உற்ற நண்பர்கள்
மூச்சு முட்டிப்
படிக்கக் கண்டு
நானும் பயந்து படித்தேன்,
முட்டி முட்டி....
பல நேரம்
படிப்பதாய்
நடித்தேன்.

எல்லோரும் சொன்ன மந்திரம்
“வேலைக்குப் படி”
படித்தேன்.
வேலைதான் இல்லை.

படித்ததை ஒப்பிப்பேன்,
போதுமா?
வாழ்க்கையை
படிக்க வேண்டாமா?

உணர்ந்து படித்திருந்தால்
நானும் ஒரு
ராமானுஜனாகி
இருக்க மாட்டேனா?
புதிய கண்டு பிடித்தல்கள்
புண்ணிய பாரதத்திற்கு
கிடைத்திருக்குமோ?

எல்லோரும்
என்னைப்போல் தான்.
இழப்பு எனக்கா?
இந்த நாட்டிற்கா?

No comments:

Post a Comment