நடை தளர்ந்த தாய்!
ஊசியாய் மாறி
உடல் குத்தும்
மழைத் துளிகள்
மனம் குத்தவில்லை.
குடையில்லை என்றாலும்
இயற்கையின்
கொடையொன்றைக்
கைப்பிடித்து
முகம் மறைத்து
குதிகாலில் குத்தும் கல்
கூர்மையிலை எனக் கொண்டு
மகன் பேசும் வார்த்தையின்
கூர்மையிலே
மனம் நொந்து
நடக்கின்றாள்
நடை தளர்ந்த தாய்!
No comments:
Post a Comment