பின்னிரவில் பெய்த மழை
அதிகாலைப் பனித்துளியாய்
இலைமீது இறுமாந்து...
இலையில்லை,
இதுவல்ல பேரழகு,
அதிகாலை நீராடி
அன்பென்னும் உயிர் பூத்து
இதழினிலும் இழையோடும்
முடியினிலும் நீர்முத்தாய்
சரம்கோர்த்து வருவாளே,
சுவை முத்தம் தருவாளே ,
எனை வென்றப் பேரழகி,
இதை விடவா இலையழகு?
No comments:
Post a Comment