Monday 22 July 2013

எமது தடங்கள்





















பிறப்புக்கும் இறப்புக்கும்
இடைப்பட்ட
நெடுந்தூரப் பயணத்தில்
நிழல் யுத்தமிட்டு
நம்மைத் தோலைத்தோம்.

உணர்ச்சியின் பிடியில்
உறவுகள் கொன்று
பிரிவினை வாதம்
பெருகிடச் செய்தோம்.

முக மட்டும் தொலைத்ததாய்
மடமையாய் நினைத்தோம்,
மூச்சிலே சாதி
இனவெறிக் கொண்டு
முழுவதும் தொலைந்து
தழும்பானத் தடங்களில்
வாழ்கிறோம்.

இனி வரும் நீங்கள்
எம்மைத் தொடராதீர்.
எமது தடங்கள்
உமக்கு எச்சரிக்கை.

மனிதம் வளருங்கள்.
மனதைப் பழகுங்கள்.
நட்பில் வெல்லுங்கள்,
வாழ்வே இனிமையாகும்!

No comments:

Post a Comment