விழியசைவிலென் மனமசைய
விரல் பூக்களிலே மனம் குளிர
உளத் துடிப்பினிலே இசை பரவ
உனைத் தேடு மெந்தன் உயிர் புகுந்தாய்.
சிறைக் கூண்டிலுள்ள தத்தைப் போலவே
சிந்தை முழுதும் உனில் தஞ்சம் ஆனதே.
கரை காணாத வேள்ளம் போல எண்ணம்
கட்டுத் தெறித்து உனை வந்து சேருமே!
எந்தன் தோள்க ளுந்தன் தலை சாய்ந்திடவே
எந்தன் கரங்க ளுனை யென்றும் சேர்ந்திடவே
எந்தன் மூச்சு உனை என்றும் காத்திடவே
உந்தன் இமை திறந்து என்னில் சேரடியோ!
No comments:
Post a Comment