Friday 12 July 2013

தாமரைக் குளம்

தாமரைக் குளத்தில்
தாவிக் குதித்து
உள் நீச்சல் அடித்து
வெகு தூரம்
போக யத்தனிக்க
தாமரைத் தண்டொன்று
கால் சுற்றி யிழுக்க
அறுத்தெரிய மனமின்றி
மூச்செடுத்து
சிறிது நேரம் ஆழ்ந்திருந்து
கை நீட்டி
தண்டை விலக்கி
நீர் மேல் வந்த போது
நண்பன் கூவினான்,
“டேய் வாடா! அப்பா வரார்!”

No comments:

Post a Comment