Monday 22 July 2013

தமிழ்காதல்



கண்ணின் விழித்திரையைக் களவாடிச் சென்றாய்
காணும் பிம்பமெல்லாம் நீயாகி நின்றாய்,
பொன்னிற் சிலையாகி பருவங்கள் வென்றாய்,
மின்னும் ஒளியோடு மனம் கொள்ளைக் கொண்டாய்.

தென்னை இளங்கீற்றைத் தழுவாதோ காற்று,
விண்ணில் விளையாடும் முழுமதியைச் சேர்த்து
முன்னை நான் சொன்ன தமிழ்காதல் பாட்டு
எந்தன் மடிசாய்ந்து உருகாயோ கேட்டு?

No comments:

Post a Comment