Monday 29 July 2013

என்று விடியும்?

துப்பாக்கிக் கொண்டு வா
தோட்டாவை விழுங்க வா?
மத்தாப்பு என்று நான்
மார்போடு ஏந்த வா?

ரத்தத்தில் எழுதிய கவிதைகள் எங்கள்
சித்தத்தில் ஊறிய நிகழ்வுகள்
பெற்றவை வீர் விழுதுகள் அவை
மொத்தத்தில் ஆறாத் தழும்புகள்.

சூரியன் வந்து விடியுமோ அன்றி
சேவல்கள் கூவி விடியுமோ?
வேரினில் வெந்த புண்களின் வலி
மாறிட நேரிடில் விடியுமோ?

No comments:

Post a Comment