Monday 29 July 2013

உந்தன் வசம்

மலரினும் மெல்லிய மனதோ?
மாந்தளிர் தேகம் உனதோ?
குரல்தேன் தோய்ந்த குழலோ? வெண்
பரலை மறைத்த இதழோ?

புவியில் பூத்த மதியோ என்
புதினம் கண்ட ரதியோ?
கவியின் காதல் வரிகள் உன்
விழியின் வழியே வருதோ?

இனிமை பொங்கும் ரதியோ என்
இதயக் கூட்டின் ஸ்வரமோ?
உணர்வில் கலந்த வரமோ என்
உயிரே உந்தன் வசமோ?

No comments:

Post a Comment