Friday 12 July 2013

வண்ணம்


வண்ணக் கலவையற்ற பெண்ணவள்
எண்ணத்தில் தூய்மைக் கொண்டவள்
திண்ணம் கொண்ட மனம் பெற்றவள்
என்னை இதயத்திலே வைத்தவள்.

குறையை மறைப்பதிலை என்னிடம் – மன
நிறைவைத் தருவதிலே முன்னிடம்
நிறைவைப் பகிர்வதிலே அவள் மனம் – அன்னப்
பறவை போலவன்றோ மின்னிடும்!

காதல் கொண்டேன் அவள் உறவிலே – பலக்
கவிதை தந்தேன் அவள் நினைவிலே.
சேர்த லொன்றே இனி வாழ்விலே - பூஞ்
சோலையிடை வாழ் வாகுமே!

No comments:

Post a Comment