Sunday 28 July 2013

மாற்றங்கள் எங்கே?

பெண்மையைப் போற்றுதும்,
பேச்சினில் மட்டுமே!
பெண்ணுக்குப் பெண்தான்
பேரிடரோ?
ஆணாதிக்கம் அதிகமென
அறை கூவல்.
உடற்பசியில்
தகாத செயலுக்கு
உந்தப் படும் ஆண்மகன்
தவறானவன்தான்.
தண்டனைக்கு உரியவன்தான்.
உள்ளத்தை காயப்படுத்தி
ஊமையாய் ஆக்குவது
பெண்தானே கூடுதல்!
தேவதைகளை
தேவதாசிகளாய் ஆக்கியது
ஆண்களாய் இருக்கலாம்.
அதற்கு தூண்டுகோலாய்?
மாற்றங்கள் மனதில் தேவை!
எத்தனை பெரியார் வந்தென்ன?
எமை காக்க
எம் மனதில் மாற்றங்கள்
வந்தாலன்றி?

No comments:

Post a Comment