Wednesday 31 July 2013

பாட்டி






















எனைக் கண்டதும் வாஞ்சையாய் அழைப்பவள்
இரு கைகளால் என்னை வாரி அணைப்பவள்.
நெடு நேரம் நெற்றியில் முத்தம் வார்ப்பவள்,
நிஜமான அன்போடு எனைப் பார்ப்பவள்

உலர் தேகம் தடுமாறும் கரம் கொண்டவள்,
மலர் வாடி மணம் வாடா மனம் கொண்டவள்.
தளர் கால்கள் தடுமாற எனைத் தாங்குவாள்
வளமான வாழ்வென்னைத் தொட வேண்டுவாள்.

அவள் பெற்ற மகளெந்தன் தாயா னவள்
மகள் பெற்ற மகன் அவளின் ராசாவாம்,
உடல் சோர்ந்து உளம் சோரும் அந் நாளிலும்
மடை யற்ற அன்போடு எனைத் தேடும் என் பாட்டி.

No comments:

Post a Comment