Saturday 20 July 2013

ஆண்டாளாய்
















வெண்புறாக்கள் துணையோடு
பெண்புறா ஒன்று
அம்மானை ஆடியபடி
அம்மானைத் தேடுகிறாள்.

விருந்தோம்பல் வரும் நேரம்
விழியோரம் துளி ஈரம்.
விருந்தாடி அவள் மீது
விலை பேசா திருத்தல் நலம்.

மாமன் மேல் மனசுக்குள்
மலையளவு ஆசைதான்.
வாவென்று ஒரு வார்த்தை
விளம்பானோ விரைவில்?

போரென்றால் ஒரு நொடியில்
போகின்றான் துணிவில்
பேதையவள் துயர் துடைக்க
தயக்கமென்ன மனதில்?

உறவுக்குள் அவள் மீது
இரக்கம் கொண்ட சிலரும்
பேருக்கு உறவு சொல்லி
காதல் கொள்ள பலரும்

வாரத்திற்கொரு முறையாய்
பெண் கேட்டு வந்திடவே
முறையிட்டாள் மாமனிடம்
மீட்டுக் கொண்டு போகச் சொல்லி,

ஆட் கொள்ள வருவானோ
அவளே தன் வாழ்க்கையென,
ஆண்டாளாய் போவாளோ
ஆண்டவனே தானறிவான்!

No comments:

Post a Comment