Friday 26 July 2013

மீண்டும் வருவான்























வெடித்துச் சிதறும் வானம்
வாய் பிளந்து நெருப்பை கக்கும் பூமி,
துள்ளிக் குதித்தோடி
தம்மைக் காக்கத் துடிக்கும்
மனிதர்களிடையே நானும் ஒருவனாய்

உடலெல்லாம் எரிந்து
சாம்பல் பூசி,
வெடித்துப் பாளமாகி போன பின்னும்
நல்லவனொருவன் வந்து
நம்மைக் காப்பானெனும்
நம்பிக்கையில்....

என்னுள் எரியும் தீயை
என்னால் மட்டுமே அணைக்க
முடியுமெனத் தெரிந்தும்,
என்னைச் சுற்றி உள்ளோரைத்
தூக்கிக் கொண்டு
நான்தான் ஓட வேண்டுமென
அறிந்திருந்தும்
எங்கிருந்தேனுமோர் தலைவன்
எழுந்து வருவானெனும்
இறுமாப்புடன்
எரிந்து கொண்டே இருக்கிறேன்,
இன்னும்.....!

No comments:

Post a Comment