Sunday 14 July 2013

கவின்மதி

முறுக்கிக் கொண்டுச் சென்றாள்
முகம் திருப்பி நின்றாள்.
கருவிழிகள் வண்டாய்
கபடவிழி கொண்டாள்.

படபடக்கும் நெஞ்சில்
பருவ நிலை மாற
விறுவிறுத்துப் போனேன்
வெப்ப நிலைக் கூட.

வடமொன்றைப் பிடித்து
வேல்விழியாள் இழுக்க
திடம் கொண்டு நானும்
திமிர் பிடித்து நிற்க

சினம் கொண்ட நேரம்
மனம் போகும் தூரம்
நிலைக் கொண்டு மீண்டும்
நிலாக் காண வேண்டும்.

மனச்செருக்கை மாய்த்து
மனையாளை இழுத்து
மார்போடு அணைத்து
வான்மேகம் புகுந்தேன்.

கார்மேகம் நீங்கி
கவின் மதியைக் காட்ட
கவி சொன்னக் காதல்
களம் காணலானோம்!

No comments:

Post a Comment