Wednesday 31 July 2013

நிசப்தத்தில் மகிழ்ந்தேன்



வேலை செய்யும் வேளைகளில் சில
வேண்டாத நிகழ்வுகள் உண்டு.
காலை வந்த களிப்பற்று நான்
களைத்திருப்பேன்.
அன்றும் அவ்வாறே நான்
அலுத்துப்போய்
இல்லம் எத்த
அன்னையின்
ஆறுதல் மொழி கேட்டு
அப்படியே உறங்கிப் போனேன்.
என்னிலை மறந்த இரவிலே
எங்கிருந்தோ அழைத்த
என் கைப்பேசி.
எடுத்துத் தொடர்பிலானேன்.
என் கண்ணுக்குள் வானவில்
பொன் வானத்தில் தேன் மழை.
நெஞ்சத்தில் பூமலர் சாமரம்,
மின்சாரமும் தேகத்தில் பாய்ந்திட
அழைத்தவள் அவள்தான்
அலுவலகத்தில்
அனுதினமும் பார்ப்பேன்.
ஆனாலும் பேசேன்.
என் பார்வைகள் அவள் அறிவாள்.
அவள் பார்வையை நான் அறியேன்.
என்றேனும் எனை உணர்வாளோ
உள்ளத்தால் மலர்வாளோ,
வெள்ளமாய் அன்பைப் பொழிவாளோ
என
ஏங்காத நாளில்லை.
இன்றெனை அழைத்தாள்
இன்குரல் பூத்தாள்.
இசை மழை வார்த்தாள்.
என் நிலை வாடிக்
காண சகியேன் என்று
தன் நிலை பகர்ந்தாள்.
இனியென்ன வேண்டும்?
பெண்மனம் திறந்து
பேசிடக் கேட்டு
என்மனம் தோடிப்
பாடிடச் செய்ய
பின்னர் அழைக்கிறேன் எனச் சொல்லி
கைப்பேசி கீழே வைத்து
விழிகள் மூடி
கைகளும் மடக்கி
என்னுள் பயணமானேன்.
இன் நிலை
இன்ப நிலை
இதன் ஒவ்வொரு நொடியும் நான்
ரசிக்க வேண்டும்
ருசிக்க வேண்டும்.
கரும்புச் சாறின்
கடைசி சொட்டை
நாவை நீட்டித்
தொட்டுறிஞ்சி
தொண்டைக் குழியில் இறங்கும்
சுகம் காண்பதைப் போல்,
சுடு மணலில்
நெடுந்தூரம் நடக்கும் நிலையில்
திடீர் மழையில் சில நேரம்
நனையும் நொடிகளில்
நான் பெறும் சுகத்தை போல,
என்னவளின்
இன்னிசைக் குரல்
என் நெஞ்சில்
இனித்துக் கொண்டே
இருக்கட்டும்.

No comments:

Post a Comment