Monday 29 July 2013

மலர் முகம்

சாளரம் வழி
சில்லென்ற காற்று
சிறு தூரலுடன்,
துள்ளிக்குதித்த ஆட்டுக்குட்டி,
உடல் சிலிர்த்தோடி
மரத்தின்கீழ் நின்றது.
என் வீட்டு நாய்குட்டி
என்னைப் போன்று
ஓடவா என்று
இறுமாப்புடன் நனைந்தது.
வீட்டிற்குள்ளிருந்த
என் அக்காள் குழந்தை
ஓடிச் சென்று
தோட்டத்தில் பூத்திருந்த
புதிய வெள்ளை ரோஜாவை
கவிதையாய் கண்டு நின்றாள்.
இதழ்களிலும்,
இலைகளிலும்
மழைத்துளிகளை வாங்கி
தலையாட்டி மகிழ்ந்து....
குழந்தையை
வா வா வென
அழைத்தது ரோஜா.
குழந்தையின் முகத்திலும்
மழைத்துளிகளும்
மகிழ்ச்சியும் பூக்க
அதிசயித்தேன்.
அழகில் மிகுந்தது
மலர்ந்த ரோஜாவா?
விகசித்த
அக்காள் மகள் முகமா?

No comments:

Post a Comment