Wednesday 17 July 2013

நிறைவெங்கே?

கற்பனையின் காரிருளை
கல்லறையில் புதைத்துவிட்டு
பற்கிட்டித்து கடுங்குளிறில்
பாடம் செய்த பாடம் விற்று

வரமெனவே வாதிட்டு
வாங்கிவந்த வாழ்க்கையிலே
நீரற்றப் படகாக
நங்கூர நிழல் விதைத்து

விருப்புமின்றி வெருப்புமின்றி
விடைகளற்ற விடியல் தேடி
நெருப்புக்குள் நீச்சலிட்டு
நிகழ்கால நிறைவிழந்து


உள்ளூர ஊற்றெடுத்த
உத்வேக மனம் பிளந்து
வல்லூறாய்த் தேடுகிறேன்
வாழ்வினிலே நிறைவெங்கே!

No comments:

Post a Comment