Saturday 20 July 2013

“வரேங்க்கா!!!!!”




























வியர்ப்பில்லா குளிர்மாலை ஞாயிறு,
வீட்டில் அம்மாவும் அப்பாவும்
டிவியிலும்
மடிக்கணிணியிலும்...
மழை விட்டதில்
மனமகிழ்ச்சி சிறுவனுக்கு
புறாப் போல
புறம் ஓடி
மழை நீரில் குதித்தாடி
மனத்தளையை அறுத்தோடி
களிப்பு நிலை கொண்டான்.
பொருக்குமா வீட்டிலுள்ள
அக்காள்களுக்கு?
ஒருத்தி வந்து அழைக்க...
மற்றொருத்தி அம்மா எனக்
குரல் கொடுக்க...
ஆனந்தத்தை அவசரமாய்
அங்கேயே தொலைத்து
சலிப்புடன் ஒரு
“வரேங்க்கா!!!!!”

No comments:

Post a Comment