Tuesday 30 July 2013

கலையாத நிலை
























செங்காந்தள் மலரில் வெண்மேகப் பதிவு
செந்தேனில் தோய்ந்த சுவையூட்டும் உதடு
பூமுல்லைத் தேடி வனம் கண்ட மனது
பன்னீரும் தேனும் ஒன்றான உறவு

உள் மூச்சுக் காற்றாய் உனைச் சேர வேண்டும்
உன் பேச்சில் வாழும் உணர்வாக வேண்டும்
கண்ணுக்குள் நீளும் கனவாக வேண்டும்
மண்ணுக்குள் சேரும் மழையாக வேண்டும்.

வன்பாதை மேவி விரல்கோர்த்த சீதை
என்காதல் வாழ்வில் இடர் நீக்கும் கோதை
கண்ணே என் வாழ்வில் கண நேரம் கூட
கலையாது காதல் நிலை காண வேண்டும்!

No comments:

Post a Comment