இமை மூடி
இரைச்சல் தின்று
இதழ் ஒழுகும்
கோபம் வென்று
மனச் சிறையில்
மௌனம் கொண்டு
மன இறுக்கம் தளர்த்த
எத்தனை முயற்சி?
மலரே உன்
முத்துச் சிரிப்பில் என்
மனம் இளகிப் போகுமடி!
அருகில் ஓடி வந்து
கழுத்தைக் கட்டியணைத்து
கன்னத்தில் நீ தரும்
ஒரு முத்தம்
என் மனமெங்கும்
உற்சாகம் பூக்க வைத்து
அன்பின் வழி எனை
ஆக்கம் பெற
உந்துமடி!
இரைச்சல் தின்று
இதழ் ஒழுகும்
கோபம் வென்று
மனச் சிறையில்
மௌனம் கொண்டு
மன இறுக்கம் தளர்த்த
எத்தனை முயற்சி?
மலரே உன்
முத்துச் சிரிப்பில் என்
மனம் இளகிப் போகுமடி!
அருகில் ஓடி வந்து
கழுத்தைக் கட்டியணைத்து
கன்னத்தில் நீ தரும்
ஒரு முத்தம்
என் மனமெங்கும்
உற்சாகம் பூக்க வைத்து
அன்பின் வழி எனை
ஆக்கம் பெற
உந்துமடி!
No comments:
Post a Comment