Sunday 28 July 2013

உதவி

நீங்கள் விரும்பும் ஒவ்வொன்றும் உங்கள் சௌகரியப் பகுதிக்கு வெளியே இருக்கிறது.--- ராபர்ட் ஆலன்.

ஒரு சிறுவன் பட்டுக் கூட்டில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு பட்டுப்புழுவைக் கண்டான். அது பெரிதாகி, பட்டாம்பூச்சியாய் மாறும் என எதிர்பார்த்தான்.சில நாட்களில் அந்த பட்டுப்புழு அசைவதைக் கண்டான். பட்டுப்பூச்சி போராடி வெளிவந்ததைக் கண்டான். அந்த சிறுவன் அந்த பட்டுப்பூச்சிக்கு உதவ விரும்பினான். தனது வீட்டிற்கு ஓடிச்சென்று ஒரு கத்தரிக்கோலை எடுத்து வந்தான். அவன் கவனமாக அந்த பட்டுக்கூட்டை வெட்டி எடுத்தான். முழு வளர்ச்சி பெறாத பட்டுபூச்சி வெளிவந்தது. இனி அந்த புழுவால் ஒரு போதும் பட்டுபூச்சியைப்போல் பறக்க முடியாது. அந்த சிறுவன் அந்த பட்டுபூச்சிக்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு தனது அறியாமையால் அதனை கொன்று விட்டான்.
இப்படித்தான் பல பெற்றோர் தனது குழந்தைகளை போராட்ட வாழ்க்கையில் ஈடுபடுத்தாது அவர்களது திறமைகளைக் கொன்றுவிடுகின்றனர்.

No comments:

Post a Comment