Friday 19 July 2013

உண்மை அழகு

மிடுக்கான நடை
எடுப்பான உடை
வெடுக்கென்ற பேச்சு
சுடும் பார்வை வீச்சு,

வெளிர்தங்க மேனி
தளிர் கால்கள் தேனி
வளம் கொண்ட வாழ்க்கை
வரம் கொண்ட ராணி.

இவைக் கொண்டிருந்தால்.
எழில் உள்ளதாமோ? - இவர்
இருள் உள்ளம் கொண்ட
பகல் பேய்களன்றோ?

பூவையர் மட்டுமல்ல
ஆடவர் கூட இங்கு
ஆணவச் செருக்கிருந்தால்
அழகெலாம் மறைந்து போகும்.

தானெனும் சிந்தையகற்றி
நாமெனும் எண்ணம் கொண்டு
அன்பெனும் காற்றை உண்டு- உண்மை
அழகினைப் பெற்று வாழ்வோம்!

No comments:

Post a Comment