Wednesday 31 July 2013

ஷேர் மார்க்கெட்



ஷேர் மார்க்கெட் எவ்வாறு நடை பெறுகிறது?
ஒரு ஊரின் அடுத்த வனத்தில் குரங்குகள் ஏராளமாய் இருந்தன. நகரத்திலிருந்து ஒரு வியாபாரி, அவன் உதவியாளனுடன் வந்து குரங்குகளைத் தான் வாங்கிக் கொள்வதாகக் கூறி, ஒரு குரங்குக்கு ரூபாய் 5 என விலை நிர்ணையம் செய்தான். உடனே அந்த ஊரிலுள்ள மக்கள் வனத்துக்கு சென்று ஏராளமான குரங்குகளைப் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்து பணம் பெற்று சென்றனர்.
சிறிது நாட்களில் குரங்கு வரத்துக் குறைந்தது. உடனே வியாபாரி விலையை ரூபாய் 10 என நிர்ணயம் செய்ய, மீண்டும் மக்கள் வனத்துக்குச் சென்று குரங்குகளைத் தேடிப் பிடித்து கொண்டுவந்து கொடுத்து பணம் பெற்று சென்றனர்.
மீண்டும் குரங்கு வரத்துக் குறைய, இம்முறை வியாபாரி ரூபாய் 20 என நிர்ணயம் செய்துவிட்டு, நகரத்துக்கு சென்றுவிட்டான். அவன் உதவியாளன் மக்களிடம், வனத்தில் குரங்குகள் கிடைப்பது அரிது, எனவே தன்னிடம் உள்ள குரங்குகளை ரூபாய் 15 என்று பெற்றுக் கொண்டு, வியாபாரியிடம் 20 என்று விற்று கொள்ளச் சொன்னான்.
மக்களும் ஆர்வமாய் அவனிடம் இருந்த குரங்குகளாய் 15 ரூபாய் என்ற விலையில் வாங்கிக் கொண்டனர். உதவியாளன் குரங்குகள் அனைத்தையும் விற்றுவிட்டு நகரத்துக்கு சென்றுவிட்டான்.
வியாபாரியும், உதவியாளனும் திரும்ப வரவே இல்லை.
படித்தது.- சுமன்

No comments:

Post a Comment