Friday 12 July 2013

வலி













வலியற்ற வாழ்க்கை
விரலில்லா கரமோ?
எதைப் பற்றியும்
கவலையில்லை,
எதைப் பற்றவும்
விரலில்லை.
பற்றுதல் வைத்தால்
பாரங்கள் கூடும்,
பாரங்கள் அற்றால்
வேதனை துறக்கும்.
ஆனால்,
வலியற்ற சுகங்கள் எதற்கு?
பற்றற்ற வாழ்க்கை எதற்கு?
பிறர் மீதுள்ள பற்றினால்
பெற்ற வலியை
உணர்வதே வாழ்க்கை.
அந்த வலியின் சுகமே
வாழ்வின் இனிமை.

No comments:

Post a Comment