Thursday 25 July 2013

பொய்யன்


























ஆற்று மணல் படுகை
அவளோடு நான்..
என் கண் பொத்தச் சொல்லி
சிறு கையால்
மணல் குவித்து
சிறு மதில் வைத்து
துரும்பெடுத்து இடை ஒளித்து
என் இருகைக் கூப்பி
இடம் தேர்ந்து
வைக்கச் சொல்ல,
என் கைகளுக்குள் துரும்பு சிக்க,
எனைக்
கண் பொத்தா பொய்யனெனப்
பழியுரைத்தாள்.
இன்றுமெனைப்
பொய்யனெனச் சொல்லி
இள நகைப் புரிந்து
எனைக் காதலிக்கவில்லையென
அவள் பொய்யுரைக்கிறாள்.

No comments:

Post a Comment