Sunday 14 July 2013

நத்தை மனசு

நினைவுகள் சில நேரம்
மனம் கொத்திப் பறவையாய்,
சில நேரம் பசுமரத்தாணியாய்
பல நேரம் பாய்கின்ற நதியாய்,
சில நேரம்
ஓட்டுக்குள் அடங்கும்
நத்தையாய்.
எந்த செயலும் விரும்பாமல்,
எங்கும் போகப் பிடிக்காமல்,
சோம்பி கிடக்கும்,
மெதுவாய் மூக்கை நீட்டிப் பார்க்கும்,
பிடித்த மணம் வந்தால்
புறம் வரப் பார்க்கும்,
நல்ல நட்பைப் பெற்றால்
நத்தை மனம் வேண்டாம்,
நல்ல வேளை
எனக்கில்லை
நத்தை மனசு!
 

No comments:

Post a Comment