Thursday 11 July 2013

இசைக்குழலி


குரலினிலே இசை சேர்த்து
குழைத்தெடுத்துத் தந்தாள்,
விரல் வழியும் வெட்கத்தை
நகம் கடித்துத் தின்றாள்,

குழலினிலே மலர் தோய்த்து
நறுமணமும் கொண்டாள்,
மழையொழுகும் இரவினிலென்
மனம் பறித்துச் சென்றாள்.

இதழினிலே தேன்சுவையை
கலந்தெடுத்து மென்றாள்,
இருவிழியில் உயிர் பருகி
என் கனவைக் கொண்டாள்.

பலவருடம் தனிமை சுகம்
கொண்டிருந்த என்னை
பண்பாடி மலர் சூடி
கரம் கொடுக்கும் நாள் எந்நாள்?

No comments:

Post a Comment