Wednesday 17 July 2013

வாழ்வேன் உனதருகில்














என்னை உணர்ந்தவள் நீ!
என்னுள் நிறைந்தவள் நீ!
முந்தைப் பிறவியிலும்
எந்தன் உயிராய் நீ!

மண்ணில் மலர் வடிவும்
விண்ணின் நிலவுருவும்
பெண்ணே உனதுருவில்
கண்டு மகிழ்ந்தேனே!

காதல் சொல்வதற்கு
காசு தடையுமில்லை,
நேசம் கொள்வதற்கு எந்
நிலையும் கவலையில்லை.

வாழ்வே சொர்க்கமெனும்
வாசல் கொண்டவளே,
வாழ்வேன் உனதருகில்
வானக் கூரையின் மடியிலும்!!

No comments:

Post a Comment