Tuesday 30 July 2013

நாக்பால்

















போராட்ட இலக்கணங்கள்
பொய்யானது
பொடியாகிப் போனது
மண் மாஃபியா,
துர்கா ஷக்தி நாக்பால்
துர்கையை பேரில் சூடியவள்
துஷ்டர்களை துரத்தியாடினாள்.
பெண்மைக்கும் உண்டு
பெரு வீரம் என்றாள்.
அவளையும் துரத்திவிடும்
அரசாங்கம்.
ஆனாலும் இது
சிறு தோல்வியே!
புயலைப் போல்
மீண்டு வருவாள்.
பல நூறு
புதிய துர்கைகளை
உருவாக்குவாள்.
வளர்க அவள் சேவை.

No comments:

Post a Comment