Thursday 25 July 2013

இதழோய்




புஞ்சிரிப் பூத்த செவ்வரி இதழோய்,
அஞ்சன விழியில் அன்பினைப் பகர்வோய்,
நெஞ்சினில் காதல் நினைவதன் ஊற்றோய்,
வெஞ்சுடர் தோய்த்த வெண்ணிற இடையோய்,

பைந்தமிழ் தேனில் ஊறிய சொல்லோய்,
பாடிடும் நாவில் பரவசம் கொண்டோய்,
தென்றலில் ஆடும் தேவதை பேரோய்,
தஞ்சமென் றுனிடம் நான் வந்ததை பாரோய்!!

No comments:

Post a Comment