Monday 15 July 2013

நீ

ஆழ்ந்த உறக்கத்தின்
அடித்தளத்தில் நானிருக்க
சூழ்ந்த கனவுகளில்
சுவையமுதாய் நீ!

செவியில் இனிக்கின்ற
செந்தமிழின் சாரெடுத்து
கவிதை புனைய வைத்த
கருப் பொருளாய் நீ!

வானில் விளைந்து நிற்க்கும்
விண்மீனைக் கதிரறுத்து
தேனில் குழைய வைத்த
தொடுவானத் தென்றல் நீ!

ராகம் தாளமென நான்
பாடல் பாடிவர உயிர்
நாதம் நீயெனவே
நாளும் என்னுள்ளே நீ!


No comments:

Post a Comment