Tuesday 23 July 2013

மீண்டும் மழை

திரைச் சீலை விலக்கி
கண்ணாடியில் படிந்த
கரியமில வாயுவைத் துடைத்து
வெளியில் நோக்கினேன்.
இரவு பெய்த மழை
இனிமையாய் கண்ணெதிரே,
சிலிர்த்து நிற்க்கும் மலர்கள்,
இலை சொட்டி நிற்க்கும் துளிகள்,
காற்றின் தட்டலில்
கீழே விட்டு விடுவேனெனக்
கோர்த்துப் பிடித்த துளிகளுடன்
மலர்கள்.
போட்டியாய்
நீர்ப்பூக்களுடன்
நிலம்.
மீண்டும் மழை தொடங்க,
அம்மாவெனக் குரல் கொடுத்து
அவசரமாய் தேநீர் வாங்கி
கையிலே கடல் புறாவு மெடுத்து
சந்தோஷம் ஊற்றெடுக்க
சன்னலைத் திறந்தேன்.

No comments:

Post a Comment