Sunday 27 October 2013

தமிழ் மடி





















ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும்
உற்சாகமாய்,
உள்ளத் துடிப்பின் ஓசையிலே,
உன் மொழியின் வழியாக
எனக்கொரு தூது
எப்படியேனும் வருமென எதிர்பார்த்து,
இயக்கத்தின் வேகத்தை கூட்டிவைத்து,
மூச்சுக்குழலின் வழி
மிரட்டும் சூட்டுடன் சுவாசித்து,
மீண்டும் மீண்டும்
முட்டி நிற்கிறேன்,
இது வாசலல்ல,
வெறும் பாறையென அறியாமல்!
ஒவ்வொரு நாளின் இறுதியிலும்,
நினைவுக் குப்பைகளைக் கிளறி,
நெடிய மணத்தின் வீச்சத்தில்
நெடு நேரம் நிற்க முடியாமல்
நீங்கிப் போய் விழுகிறேன்
என் தமிழ் மடியில்…!

No comments:

Post a Comment