Thursday 24 October 2013

நன்றி தோழமைகளே!



விடையற்ற கேள்விகளென்னுள்
தினம் தினம்
விதைக்கப்படுகின்றன.
விடையறுக்க வழியற்ற மனதுடன்
இதழ் மட்டும்
ஏதோ ஓரு புன்னகையை
பூத்தபடி,,

நட்பின் முகவரிகள் என்னுள்
நிதம்
வசைபாடித்தான் இருக்கின்றன.

மனமெப்போதும்
இப்போதும் கூட,
நட்பின் அன்பு புன்னகைக்கும்,
ஆழ்ந்த கருத்துக்களுக்கும்,
சிற்சில திருத்தங்களுக்குமாய்
ஏங்கியபடியே இருக்கின்றது.

எனினும்,
சில நேரங்களில்
சில வார்த்தைகளை
கேட்கத்தான் வேண்டும்.

என் நட்புக்களெல்லாம்
எனை மன்னிக்கக் கோருகிறேன்.

சொல்லிச்செல்ல முயற்சித்தால்
அது என்றும் நடப்பதில்லை.
உங்கள் அன்பின் முன்……!

நன்றி நல்லிதயங்கள் கொண்ட
என் தோழமைகளுக்கு!

No comments:

Post a Comment