Sunday 20 October 2013

நத்தையாய்


                                                                                                                                                                    
     குளிரினில் உள்ளம் குலுங்கியதா?
தனிமையின் துணையில் வெதும்பியதா?
வெதுப்புத் தேடும் மனதிற்கு
ஒத்துழைக்க மறுக்கும்
ஊனக் கால்களை
சிரமப்பட்டு இழுத்துக்கொண்டு
ஊர்ந்தெங்கிலும்
போகவேண்டும்
ஒரு அடுப்பைத்தேடி…!
ஒவ்வொரு நாளும்
இப்படியே நினைத்துத்தான்
விடியும்வரை
முதுகுத் தண்டும் சில்லிட
கிடக்கிறேன்,
என்னுள்ளே அடங்கிய
ஈனக்குரலுடைய
நத்தையாய்…!

No comments:

Post a Comment