Wednesday 16 October 2013

மகிழ்வுனக்கு



















தனிமை பெற்ற இரவுகள்
எனை உணர்த்தும் பொழுதுகள்,
இனிமை யற்ற நினைவுகள்
அமைய பெற்ற கனவுகள்.

தொல்லையென்று நீ விட
இல்லையென்று நான் வர
கள்ளமில்லா காதலின்
கண்ணிமைகள் நீர் பெற!

உறக்கமற்ற மஞ்சமும்
உனை மறவா நெஞ்சமும்
வழக்கமற்ற பாதையில்
வருத்தம் கொண்ட சுவடுகள்!

நீயும் நீங்கிப் போகவே
நிலவுக்கென்ன கோபமா?
நீளுமெந்தன் இரவுகள்
நீ கொடுத்த சாபமா?

மகிழ்வுனக்கு வாழ்வெலாம்
மலரின் தென்றல் போல்வர
தருமெனக்கு மகிழ்வுடன்
தனிமை கொண்ட கனவுகள்!

உனைவிலகி நான் வர
உந்தன் நெஞ்சம் மகிழ்வுற
துணையுனக்கு என் கடுந்

தவமியற்றும் வாழ்வுதான்!

No comments:

Post a Comment