Wednesday, 16 October 2013

அமைதி


தெருவோர சப்தங்கள்
திகைப்பூட்டவில்லை.

கடலலையின் சீற்றமும்
வியப்பூட்டவில்லை.

வான் வெளியின் வண்ணங்கள்
எனை மயக்கவில்லை.

சுற்றுமிந்த பூமியின்
சுழல் நினைவிலில்லை.

மகரந்த பூக்களின்
மணம் மயக்கவில்லை.

ஆழ்மனத்தில் நிலவும்
அமைதி கண்டு
பார்வையை உள்ளிருத்தி
பயந்துபோய் பார்த்தேன்.


தேடுதல் அற்று
திசைகளும் மறந்து
வாட்டங்கள் தொலைத்து
வெற்றிடம் நாடி
ஆழ்கடல் அமைதியில்

என் மனம்!

No comments:

Post a Comment