தெளிதேனைப் பருகிய செவ்விதழில்
நீ மகுடி வாசிக்க,
நான் மயங்கிய நிலவாக
உன்னருகே வந்து
உன்மத்தனாக,
உன் மின்னுமிரு கண்ணொளியில்
என்னுயிரைப் பறிகொடுத்து,
கவிதையென மலர்ந்த
கண்மணியின் அருகமர்ந்து
இருகையினிலுனை யேந்தி,
மடியிருத்தி,
என்னிதழை
நின் மென்னிதழில் பொருத்தி
உயிரொடு உயிர் கலக்க
இதுவன்றோ வழியென்று
என்னுயிரை நின்னிதழ் வழியும்,
நின்னுயிரை என்னிதழ் வழியும்
பருக,
பருக, பருக, பருக,
பருகிக் கொண்டே இருக்க,
எத்தனை யுகம் போனதோ,
எத்தனை புலம் பெயர்ந்ததோ,
எனக்கென நீயும்,
உனக்கென நானும்,
இவ்வுலகில் உண்டாக்கப்பட்டதாய்
உணர்ந்து,
உலகம் மறந்து,
உறவும் துறந்து,
உயிர் கலந்திருந்தோமடி!
No comments:
Post a Comment