Monday 21 October 2013

பாராட்டில்லாத பதக்கங்கள்




















அவசரமாய் அள்ளியெறிந்த
வானோவியத்தின் மீது
அலங்கோலமாய்
கார்மேக ஊர்வலங்கள்.

தெருவோர ஆடு
தோட்டத்துள் நுழைந்து
ஆசையாய் வளர்த்த
பட்டு ரோஜாவை
பதம் பார்த்து விட்டுச் சென்றது.

குருவி தன் கூட்டிற்கு
கொண்டுவந்த முள்ளொன்று
காலில் குத்தியது.

வேகமாக வந்த காற்றின்
வெப்பச் சூட்டில்
மனதின் கற்பனைகள்
கரைந்தன.

இவற்றிலெல்லாம்
இல்லாத வலி
பாராட்டில்லாத பதக்கங்களை
சுமந்த நெஞ்சில்……..!

No comments:

Post a Comment