Saturday 26 October 2013

ஏது இணை?



எண்ணங்களின் வலிமைத் தந்த பலம்,
எதிலும் தெளிவினைக் காணும் மனம்
உழைக்க அஞ்சாத உறுதியான திடம்,
உண்மைத் தடம் நோக்கி உந்திப் போகும் விதம்,
கனவிலும் கவிதையை நேசிக்கும் குணம்,
கருணையின் வடிவாய் ஒளிரும் நிதம்,
கற்பனைக் கப்பாற் பட்ட உனை,
கண்ட என் வாழ்விற் கேது இணை!

No comments:

Post a Comment