Thursday 29 August 2013

காதல் புறா



















சாலைப் புழுதியிலா
மாலைப் பொழுது அது.
காளையென் வரவைக்
காத்து கனலமர்ந்தாள்.

கூந்தல் முடிதிருத்தி
பூவை அதிலிருத்தி
வாளில் புருவமெழுதி
தோளில் குழல் தவழ

காதல் நோய் பிடித்து
கன்னி அமர்ந்திருந்தாள்
காதல் புறாயிரண்டின்
கதையை கேட்கவிலை.

நாசி துடிதுடிக்க
பேசும் திறனிழந்து
ஆசை ஊற்றினிடை
அமிழ்ந்தே அவளிருந்தாள்.

தூணை புறம் தழுவ
வானில் உளம் நழுவ
நாணி என்னுருவம்
காண மனமகிழ்ந்தாள்!

No comments:

Post a Comment