காதல் சொல்லி
விருத்தமாய்
காத்திருத்தல்
விருப்பமாய்,
காணும் நொடி
வண்ணமாய்
கண்களிலே
பூப்பதாய்..
சேர்ந்தவிழி
சந்தமாய்
சேயிழையோ
தென்றலாய்
காந்தமொழி
கவிதையாய்
கனவுகளில்
செழுமையாய்
கார்மேகக்
குளுமையாய்
கண்களுக்கு
வளமையாய்
எந்தனுயிர்
பிம்பமாய்
உனைத்தேடல்
இனிமையாம்..
No comments:
Post a Comment