Wednesday 7 August 2013

பிம்பம்

காதல் சொல்லி விருத்தமாய்
காத்திருத்தல் விருப்பமாய்,
காணும் நொடி வண்ணமாய்
கண்களிலே பூப்பதாய்..

சேர்ந்தவிழி சந்தமாய்
சேயிழையோ தென்றலாய்
காந்தமொழி கவிதையாய்
கனவுகளில் செழுமையாய்

கார்மேகக் குளுமையாய்
கண்களுக்கு வளமையாய்
எந்தனுயிர் பிம்பமாய்

உனைத்தேடல் இனிமையாம்..

No comments:

Post a Comment