Monday 26 August 2013

மனங்கோணச் செய்யேன் யான்!

ஒருகரத்தில் உடைத்தேடுத்த
வரகரிசி புடைத்தபடி
தெருக் கடையில் எனைக் காண
தவிப்பது ஏன் என் சகியே?

இருவிழியின் கருவிழிகள்
என்னுயிரை ஈர்த்திருக்க,
நறுமணமுல் லைப்பூவும்
நீள் கழுத்தில் சுழண்டிருக்க,

உன் செவியோ என் சொல்லை
ஒப்பாமல் ஒதுங்கி நிற்க,
மறுமொழி சொல் இல்லாது
மறைவது ஏன் பொன்னொளியே?

அகம் வென்ற அணங்கே நீ
அருஞ்சோலைக் கரும்பே!
மகரந்த பூந்தேனுன்
மனங்கோணச் செய்யேன் யான்!

No comments:

Post a Comment