களிமண்ணில்
சிறிதளவு மணல் சேர்த்து
நீர் சேர்த்து
கால் கொண்டு உதைத்து
உடைத்து
பானை செய்யும்
பதம் காணும்வரை
மிதித்து
குழப்பி
அள்ளிக்கொண்டு
சக்கரத்தில் வைத்து
சுற்றி
கைகொண்டு அணைத்து
உருவகப் படுத்தி
ஒழுங்கு படுத்தி
அழகு படுத்தி
எடுத்து
கடும் வெயிலில் வைத்து
சுட்டு
நெருப்பிலும் வைத்து
சுட்டு
கிடைத்த பானையைத்
தட்டினால்
கணீர் கணீரென
சப்திக்கும்
என் மனதைப்போல.....!
No comments:
Post a Comment