விடியாத இரவுகளின்
வேட்கையல்ல காதல்.
உடையாத நினைவுகளின்
ஊர்வலமே காதல்.
விளக்கணைத்து வழிதேடும்
விரசமல்ல காதல்
விழிமூடி உள்வாங்கும்
உயிர் மூச்சாய் காதல்.
உடைகளிலும் நடைகளிலும்
உருவாவதோ காதல்?
உணர்வுகளின் தேக்க நிலை
உடைப்பெடுத்தால் காதல்.
ஊரடங்க தொலைபேசி
உளருவதோ காதல்?
உருவங்கள் அற்றாலும்
உருவாகும் காதல்.
நீயின்றி நானில்லை
நினைவதுவோ காதல்.
நீ மலர நான் வேராய்
நிற்பதுவே காதல்.
உன் அன்பை எதிர்பார்த்து
உருகுவதா காதல்?
என்னுடன் நீ இல்லாது
போனாலும் காதல்.
உன்னுயர்வை நான் கண்டு
மகிழ்வதுவே காதல்!
உள்ளத்துள் பொங்குதடி
உன்மீது காதல்!
No comments:
Post a Comment