Thursday 8 August 2013

துணிந்தேன்


























இருளைத் தேடும் ஒளி
இமைகள் தேடும் விழி
உணர்வில் சொல்லும் மொழி
உரைத்தல் இல்லை இனி.

தனிமை என்னும் வரம்
தருமோ இன்ப ஸ்வரம்
முடிவே இல்லா சுகம்
முதுமை வரையில் வரும்.

தேடல் கொண்ட பயணம்
தேவைச் சுமையோ துயரம்
துறவும் பெருமை இகழும்

துணிந்தேன் அதனைப் பெறவும்!

No comments:

Post a Comment