Monday 26 August 2013

குரங்கு பைலட்

ஒரு விமானம் 360 பயணிகளுடன் கடலில் வீழ்ந்து அனைவரும் மறித்துப்போக, காப்பாற்றும் குழுவால் காப்பாற்ற முடிந்ததென்னவோ அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு குரங்கை மட்டுமே!
விமான வரவேற்பரையில் அந்த குரங்கை கொண்டுவரும்போது பத்திரிகையாளர் அனைவருக்கும் அந்த குரங்கிடம் ஏதேனும் தகவல் கிடைக்குமாவென தெரிந்து கொள்ள விரும்பி அந்த குரங்கிடம் கேள்வி கேட்கத் தொடங்கினர்.
முதல் கேள்வி, “விமானம் விபத்துக்குள்ளாகும் சமயம், உன் பக்கத்து இருக்கையில் இருந்தவர் என்ன செய்து கொண்டிருந்தார்?” கேள்வி எளிமையாக கேட்கப் பட்டது.
குரங்கு தூங்குவது போல் பாவனை செய்தது. “ஓ, பக்கத்து இருக்கையாளர் உறங்கிக் கொண்டிருந்தாரோ, சரி, மற்ற பயணிகள்?” என்று கேட்க, குரங்கு அதற்கும் தூங்குவது போல் பாவனை செய்தது.
“எல்லோரும் உறங்கி கொண்டிருந்தனரா? எனில் விமான பணிப்பெண்கள்?” என்று கேட்க குரங்கு அதற்கும் உறக்கத்தின் பாவனையையே செய்து காண்பித்தது.
ஆச்சர்யத்துடன், “அப்போ, அந்த சக பைலட், மற்றும் பைலட்?” எனக் கேட்க அப்போதும் குரங்கு அதே பாவனையை காண்பித்தது.
அனைவரும் திகைத்துப் போய் நிற்க, ஒரு இளம் பத்திரிகையாளர் இடையில் நுழைந்து, “நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?” என கேட்க, குரங்கு விமானம் ஓட்டுவதாக பாவனை செய்தது.
நம் வாழ்க்கையும் இப்படித்தான். நாம்தான் நம் வாழ்க்கைப் பயணத்தின் ஓட்டுநர். வேறு யார் கையிலும் நமது வாழ்க்கையை கொடுத்து நாம் உறங்கினால், குரங்கின் கையில் மாட்டியதாகத்தான் ஆகும்.

No comments:

Post a Comment