அன்புசேர்
நெஞ்சம் கொண்ட அனங்கவள்,
பண்புடன் பாசம்
குழைத்த பாங்கினள்,
பெண்களே
வியக்கும் வண்ண பொன்மகள்,
என்னிலே
உயர்ந்து நிற்கும் என்னவள்.
கார்குழல்
கொண்ட முல்லை பூமணம்
காதலின் வாசம்
பெற்று வீசிடும்.
சூரியன் நேசம்
கொண்டு மேனியில்
சந்தனம் தொட்டு
வண்ணம் பூசுவான்.
முற்றத்து
மையம் வைத்த பானையில்
மாசறு கரங்கள்
செய்த பொங்கலை
பெற்றிட
துள்ளும் எந்தன் கைகளை
பற்றியே
வாயில் கவளம் ஊட்டுவாள்!
No comments:
Post a Comment