Monday 12 August 2013

நேரம்



































வாசலிலே வந்து நிற்க்கும் வண்ணமயிலே- என்
வாழ்க்கைக்கு வர்ணம் பூச வந்த நிலவே!- உயிர்
ஓசைக்கு உனைத் தந்த உற்ற உறவே- என்
பாதையிருள் நீக்க வந்த வெள்ள ஒளியே!

சேர்ந்திட்ட விரல் பஞ்சு சோலையல்லவா?- கண்
சேரன் மா வில்லை விழச் செய்யுமல்லவா?- பெண்
கார்முகிலைக் காதல் கொள்ளும் தோகையல்லவா?- உன்
காலழகைக் கண்டயிவன் கம்பனல்லவா?

வாசிப்பது யாவு முந்தன் பேரை யல்லவா?- புது
வாசமலர் தேகம் கொண்ட பாவையல்லவா?- இரு
நாசி மலர் மீது கொண்ட நேசம் சொல்லவா?- இனி

நாமிருவர் காதல் கொள்ளும் நேரமல்லவா?


No comments:

Post a Comment